ADDED : ஜூலை 25, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரி மாவட்டம், வீரப்பநாயக்கன்பட்டி அடுத்த பூ நகர் அருகே, நேற்று காலை, 8:20 மணிக்கு அரூர் நோக்கி தனியார் பள்ளி பஸ் வந்தது. அப்போது சாலையோரமிருந்த சிறிய பள்ளத்தில் பஸ் சாய்ந்தது. பஸ்சில் குழந்தைகளின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் குழந்தைகளை மீட்டனர்,
தொடர்ந்து, லேசான காயமடைந்த, 2 குழந்தைகளை தீர்த்தமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.