sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புகார் மனுக்கள் மீது உடனடி விசாரணை: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

/

புகார் மனுக்கள் மீது உடனடி விசாரணை: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

புகார் மனுக்கள் மீது உடனடி விசாரணை: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

புகார் மனுக்கள் மீது உடனடி விசாரணை: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


ADDED : ஜூன் 20, 2024 06:18 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, அரூர் தாலுகாவில் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு செய்தார்.

மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள, 'சிசிடிவி' கேமரா செயல்பாடுகள், வழக்குகள் குறித்த பதிவேடுகள், துப்பாக்கி லைசென்ஸ் பராமரிக்கப்படும் பதிவேடு, வருகை பதிவேடு, ஆண்கள் மற்றும் பெண்கள் கைதி அறைகளை ஆய்வு செய்ததுடன், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து, இன்ஸ்பெக்டர் வான்மதியிடம் கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது, விசாரணை நடத்தி சட்டப்படி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து அரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட கலெக்டர் சாந்தி நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள உணவு தயாரிக்கும் கூடத்தில் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின், பொன்னேரியில் ரேஷன் கடை, ஈட்டியம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வேப்பம்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதி, மல்லுாத்து கிராமத்தில் இருளர் இன மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 81 பேருக்கு வீட்டுமனைப்பட்டாவும், மகளிர் மேம்பாட்டு திட்டத்தில், 26 பேருக்கு, 1.62 கோடி ரூபாயை சுய உதவிக்குழு கடனாக வழங்கினார். ஆய்வின் போது, எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us