/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
/
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூன் 03, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் கல்வி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும், 900 மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகங்கள், சீருடைகளை, ஓசூர் தி.மு.க., -
எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் வழங்கினர். முன்னதாக, எம்.எல்.ஏ., பிரகாஷ் பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.