sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஏரியில் கொட்டப்படும் குப்பை: தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

/

ஏரியில் கொட்டப்படும் குப்பை: தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஏரியில் கொட்டப்படும் குப்பை: தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஏரியில் கொட்டப்படும் குப்பை: தடுக்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஏப் 28, 2025 07:44 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பெரிய ஏரி, 170 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வாணியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம், பெரிய ஏரி நிரம்புகிறது. இதனால், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதுடன், அரூர் நகர் பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

இந்நிலையில், அரூர் நகரிலுள்ள இறைச்சிக்கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் கோழிக் கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை போன்றவற்றை கொட்டும் இடமாக சிலர், ஏரிகளை பயன்படுத்துகின்றனர். மேலும், லாரி பட்டறைகளில் இருந்து கொண்டு வரப்படும் டயர் உள்ளிட்ட பழைய பொருட்கள் ஏரியில் போடப்படுகிறது. இதை தடுக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us