ADDED : ஜன 09, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும், பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள் மீதான, குறைதீர் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் வார புதன்கிழமை நாட்களில் நடக்கிறது.
அதன்படி நேற்று, தர்மபுரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் முகாமில், ஏற்கனவே பெறப்பட்ட, 70 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, அவற்றை தீர்த்து வைத்தார். மேலும், புதிதாக, 28 மனுக்கள் பெறப்பட்டன. இதில், ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதரன், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உடனிருந்தனர்.