/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்
ADDED : ஜூலை 10, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், பொதுமக்களின் புகார் மனுக்கள் மீதான, குறைதீர் முகாம், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் பிரதி வாரம் புதன்கிழமைகளில் நடக்கிறது.
நேற்று, தர்மபுரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில், நடந்த முகாமில், ஏற்கனவே பெறப்பட்ட, 70 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, அவற்றை தீர்த்து வைத்தார். மேலும், புதிதாக, 45 மனுக்கள் பெறப்பட்டன.இதில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் பாலசுப்பிரமணியன், ஸ்ரீதரன், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.