/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
/
பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
ADDED : செப் 22, 2024 05:29 AM
தர்மபுரி: புரட்டாசி மாத, முதல் சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோவில்களில், சிறநேற்று நடந்தது.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். கடந்த, 17ல் புரட்டாசி மாதம் பிறந்தது. புரட்டாசி மாதத்தின் முதல்சனிக்கிழமையான நேற்று, பெருமாளுக்கு அதிகாலை முதலே சிறப்பு, அபிஷேக, அலங்காரம் நடந்தது. தர்மபுரி கடைவீதியிலுள்ள, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி, பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அதேபோல், பழைய தர்மபுரி அடுத்த, வரதகுப்பம் வெங்கட்ரமண சுவாமி வெள்ளி கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூக்கனுார் ஆதிகேசவ பெருமாள் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், ராஜாபேட்டை பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில்களில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, அரூர் பழையபேட்டை கரியபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அதேபோல், மொரப்பூர் சென்னகேசவ மற்றும் வரதராஜ பெருமாள் கோவில், எம்.வெளாம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ட ரமண பெருமாள் கோவில் மற்றும் மருதிப்பட்டி, பெத்துார், கொங்கவேம்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அரூர் கடைவீதியில், பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் விற்பனை ஜோராக நடந்தது.