/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
/
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
ADDED : டிச 27, 2025 05:50 AM
ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளப்பாடி, ஆண்டியூர் பகுதிகளில் சுத்தி-கரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் நேற்று திறக்கப்-பட்டது.
ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், பெரிய தள்ளப்பாடி பகுதிக்கு, 10 லட்சம் ரூபாய், ஆண்டியூர் பகுதிக்கு, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இரண்டு இடங்களில் சுத்தி-கரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி தலைமை வகித்தார். ஊத்தங்கரை அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., தமிழ் செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்-டிற்கு கொண்டு வந்தார். மாவட்ட பொருளாளர் சுந்தரவடிவேலு, மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, சிறுபான்மையின இணை செய-லாளர் பியாரோஜான், ஊத்தங்கரை நகர செய-லாளர் சிக்னல் ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் தில்லையப்பன், ஒன்றிய துணை செயலாளர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

