sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு பள்ளி சிறு விளையாட்டு அரங்கில் கூடுதல் மின்விளக்கு வசதிக்கு கோரிக்கை

/

அரசு பள்ளி சிறு விளையாட்டு அரங்கில் கூடுதல் மின்விளக்கு வசதிக்கு கோரிக்கை

அரசு பள்ளி சிறு விளையாட்டு அரங்கில் கூடுதல் மின்விளக்கு வசதிக்கு கோரிக்கை

அரசு பள்ளி சிறு விளையாட்டு அரங்கில் கூடுதல் மின்விளக்கு வசதிக்கு கோரிக்கை


ADDED : நவ 21, 2024 01:42 AM

Google News

ADDED : நவ 21, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், நவ. 21-

தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், கடந்த, 2010ல், 39.50 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டப்பட்ட சிறு விளையாட்டு அரங்கை, அப்போதைய துணை முதல்வரும், இன்றைய முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விளையாட்டு அரங்கில், காலை மற்றும் மாலையில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். மேலும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பயிற்சி மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் மைதானத்தில், 2 இடங்களில் மட்டுமே மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் போதிய வெளிச்சம் இல்லாமல், இருட்டில் நடந்து செல்வதால், அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதேபோல், விளையாட்டு மைதானத்தை முறையாக பராமரிக்காததால், சுற்றுப்பகுதிகளில் புதர் மண்டியும், விஷ ஐந்துகள் நடமாடும் பகுதியாகவும் மாறி வருகிறது. எனவே, கூடுதலாக மின்விளக்கு வசதி ஏற்படுத்துவதுடன், மைதானத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us