/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சர்வீஸ் சாலைக்கு எம்.பி.,யிடம் கோரிக்கை
/
சர்வீஸ் சாலைக்கு எம்.பி.,யிடம் கோரிக்கை
ADDED : செப் 26, 2024 01:50 AM
ஓசூர்: கர்நாடகா மற்றும் தமிழக எல்லையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தில், சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு அமைக்கப்படுகிறது. தமிழக எல்-லையான ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா வழியாக, 45 கி.மீ., துாரத்திற்கு இச்சாலை செல்கிறது.
முக்கிய சந்திப்புகளில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என, பேரண்டப்பள்ளி, மல்லசந்-திரம், அலசப்பள்ளி, பட்டவாரப்பள்ளி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சர்வீஸ் சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை முயற்சிக்க-வில்லை. இந்நிலையில், தம்பிதுரை எம்.பி.,யை நேற்று சந்தித்த பேரண்டப்பள்ளி பகுதி மக்கள், சர்வீஸ் சாலை அமைக்க வலியு-றுத்தினர். இதனால் பேரண்டப்பள்ளிக்கு சென்ற அவர்,
சாட்-டிலைட் டவுன் ரிங்ரோடு பணிகளை பார்வையிட்டு, பொது-மக்கள், வாகன ஓட்டிகள் வசதிக்காக, சர்வீஸ் சாலை அமைக்க, டில்லியிலுள்ள மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்கு-னரை
சந்தித்து வலியுறுத்து வதாக உறுதியளித்தார்.