sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க கோரிக்கை

/

அரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க கோரிக்கை

அரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க கோரிக்கை

அரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க கோரிக்கை


ADDED : நவ 25, 2024 01:41 AM

Google News

ADDED : நவ 25, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்டில், பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலை-யத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவ ட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டிற்கு சேலம், சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்-ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்-புற பகுதிகளுக்கு இயக்கப்படும், 150க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும், ஆயிரக்க-ணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் பஸ்-சுக்கு காத்திருக்கும் பள்ளி, கல்லுாரி மாணவியரை வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்வதை தடுக்கவும், பிக்பாக்கெட், வழிப்பறி உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து நெரி-சலை கட்டுப்படுத்தவும், பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்-பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த அக்., 24ல், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட அரூர் பஸ் ஸ்டாண்டை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். பஸ் ஸ்டாண்ட் திறக்கப்-பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் புறக்காவல் நிலையம் பூட்-டியே கிடக்கிறது. இதனால், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மொபைல் போன் திருட்டு, பிக்பாக்கெட் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டில், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் பீதியடைந்துள்-ளனர். எனவே, பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை, பயன்-பாட்டிற்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us