/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போலீஸ் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டுகோள்
/
போலீஸ் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 17, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரில், போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில், ஸ்டேஷனில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீசார் உள்ளிட்டோர் வசிப்பதற்கு, ஆங்கிலேயர்கள் காலத்தில், குடியிருப்புகள் கட்டப்பட்டது. நாளடைவில் குடியிருப்புகள் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இவற்றை அகற்றி விட்டு புதிதாக போலீஸ் குடியிருப்பை கட்டினால், ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, போலீஸ் குடியிருப்பு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.