sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விதைகளின் முளைப்பு திறனை பரிசோதித்து விதைக்க வேண்டுகோள்

/

விதைகளின் முளைப்பு திறனை பரிசோதித்து விதைக்க வேண்டுகோள்

விதைகளின் முளைப்பு திறனை பரிசோதித்து விதைக்க வேண்டுகோள்

விதைகளின் முளைப்பு திறனை பரிசோதித்து விதைக்க வேண்டுகோள்


ADDED : நவ 29, 2024 01:25 AM

Google News

ADDED : நவ 29, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விதைகளின் முளைப்பு திறனை

பரிசோதித்து விதைக்க வேண்டுகோள்

தர்மபுரி, நவ. 29-

'தர்மபுரி மாவட்ட விவசாயிகள், விதைகளின் முளைப்புத்திறனை பரிசோதனை செய்து விதைக்க வேண்டும்' என, விதை பரிசோதனை அலுவலர் கிரிஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரியில் செயல்பட்டு வரும் விதை பரிசோதனை நிலையத்தில், ஒவ்வொரு பயிருக்கும் முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில், நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகள் வயலில் நன்கு செழித்து வளரும். இதேபோல், முளைப்புத்திறன் இல்லாத விதைகளால் பயிர் செழித்து வளராமல், பயிர் மகசூல் பாதிக்கப்படும். எனவே, விதைகளின் முளைப்புத்திறனை முறையாக பரிசோதனை செய்து விவசாயிகள், விதையை அவர்களின் வயல்களில் பயிரிட வேண்டும்.

விவசாயிகள் தங்களின் சொந்த விதைகளை விதைக்கும் போது, 50 கிராம் எடை கொண்ட விதை மாதிரி ஒன்றை எடுத்து, அதில் பயிரின் ரகம் மற்றும் தேவைப்படும் பரிசோதனை உள்ளிட்ட விபரங்களை எழுதி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள விதை பரிசோதனை நிலையத்துக்கு கொண்டு வந்து, விதைகளின் முளைப்புத்திறனை பரிசோதித்து சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு விதை பரிசோதனைக்கும், 80 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us