/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுற்றித்திரியும் கால்நடைகளால் சாலையில் விபத்து அபாயம்
/
சுற்றித்திரியும் கால்நடைகளால் சாலையில் விபத்து அபாயம்
சுற்றித்திரியும் கால்நடைகளால் சாலையில் விபத்து அபாயம்
சுற்றித்திரியும் கால்நடைகளால் சாலையில் விபத்து அபாயம்
ADDED : நவ 06, 2024 01:22 AM
அரூர், நவ. 6-
அரூரில், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால், விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூரில் தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், திரு.வி.க.நகர், கச்சேரிமேடு உட்பட பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும், மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதுடன், சாலையிலேயே படுத்துக் கொள்கின்றன.
இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது.
சாலைகளில் திரியும் கால்நடைகளை கடந்து செல்லும்போது, பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. உணவு பொருட்களுடன் வீசப்படும் பாலித்தீன் பைகளையும் மாடுகள் தின்று, உடல்நல பாதிப்புக்கு ஆளாகின்றன.
எனவே, சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அதிக அபராதம் விதிக்க, டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

