sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போலீசார் தாக்கியதில் வாலிபருக்கு உடல் நலக்குறைவு என சாலை மறியல்

/

போலீசார் தாக்கியதில் வாலிபருக்கு உடல் நலக்குறைவு என சாலை மறியல்

போலீசார் தாக்கியதில் வாலிபருக்கு உடல் நலக்குறைவு என சாலை மறியல்

போலீசார் தாக்கியதில் வாலிபருக்கு உடல் நலக்குறைவு என சாலை மறியல்


ADDED : மே 23, 2024 07:17 AM

Google News

ADDED : மே 23, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பைநல்லுார் : தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கருவேலம்பட்டியை சேர்ந்தவர் பழனி. இவருக்கு பச்சையம்மாள், 55, சத்யா, 43, என, 2 மனைவியர். பழனி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பழனி குடும்பத்திற்கும் அவரது அண்ணன் நடராஜ் குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்தது. கடந்த, 18ல் காலை இருதரப்பினரும் இரும்பு பைப், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து பச்சையம்மாள் மற்றும் நடராஜ் மகன் சங்கர், 40, தனித்தனியாக கம்பைநல்லுார் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, இருதரப்பையும் சேர்ந்த சங்கர், வேடியப்பன், 45, காளியப்பன், 39, நடராஜ், 60, மாது, 47, சத்யா, 43, பச்சையம்மாள், 55, மணி, 23, வெங்கடேசன், 26, சக்கரை, 49, பூவரசன், 19, முத்து, 57, ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் போலீசார் தாக்கியதில், பழனி மகன் வெங்கடேசனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதை கண்டித்தும், அவரின் உறவினர்கள் நேற்று காலை, 11:00 மணிக்கு கம்பைநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டனர். பின், 12:00 மணிக்கு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us