/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை பாதுகாப்பு வார விழா பைக்கில் விழிப்புணர்வு
/
சாலை பாதுகாப்பு வார விழா பைக்கில் விழிப்புணர்வு
ADDED : ஜன 09, 2025 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூரில், போலீஸ் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்-தது. அரூர் பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணியை, அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கடைவீதி, 4 ரோடு, கச்சேரிமேடு வழியாக சென்ற பேரணி, மீண்டும் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. இதில், அரூர் சப் -டிவிஷனுக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.