/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மாவட்டத்தில் சதமடிக்கும் வெயில்
/
தர்மபுரி மாவட்டத்தில் சதமடிக்கும் வெயில்
ADDED : மார் 16, 2024 01:30 AM
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், தொடர்ந்து சதமடிக்கும் வெயிலால் விவசாயிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு பருவமழை
ஏமாற்றியது. இதனால், பெரும்பாலான ஏரி, குளங்கள் வறண்டு காணப்பட்டது.
சில ஏரி, குளங்களில் குறைந்தளவு தண்ணீர் இருந்தது. மாவட்டத்தில்
பிப்., இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து
வந்தது. மார்ச் தொடக்கத்தில் இருந்து, வெயிலின் அளவு, 90
பாரன்ஹீட்டுக்கு மேல் அதிகரித்து காணப்பட்டது.
இதனால், ஏரி,
குளங்களில் இருந்த தண்ணீர் வெகுவாக குறைந்ததுடன் வன பகுதிகளில் உள்ள
மரங்கள் மட்டும் இன்றி, விவசாய நிலங்களிலும் தண்ணீர் இல்லாததால்
தென்னை, மா உள்ளிட்ட மரங்கள் காய்ந்து வர தொடங்கியுள்ளது.இதனால்,
விவசாயம் மற்றும் வன விலங்குகள் பாதிக்கப்பட்டு வந்தன. கடந்த சில
தினங்களாக வெயில் உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து மூன்று
நாட்களாக வெயில் அளவு, 100.4 டிகிரி பதிவாகி வருகிறது. இதனால்
பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

