/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.37 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
/
ரூ.37 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
ADDED : மே 23, 2024 07:17 AM
அரூர் : அரூர் அடுத்த புழுதியூர் சந்தையில், 37 லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூரில், நேற்று கூடிய சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 170 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 47,000 முதல், 72,000 ரூபாய் வரை விற்பனையானது. அதே போல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 6,000 முதல், 34,000 ரூபாய் வரை விற்பனையானது. தொடர் மழையால் நேற்று நடந்த சந்தையில் மாடுகளின் வரத்து குறைந்து, 37 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
அரூர் சுற்று வட்டார கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடந்து வருகிறது. இதையொட்டி, நேற்று நடந்த சந்தையில், சேவலுக்கு கடும் கிராக்கி நிலவியது.ஒரு கிலோ நாட்டு சேவல், 600 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் ஆடுகளின் விலையும் அதிகரித்து, 10 கிலோ எடை கொண்ட ஆடு, 7,800 முதல், 8,300 ரூபாய் வரை விற்பனையானது.

