/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
செந்தில் கல்வி குழுமத்தின் 5ம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாட்டம்
/
செந்தில் கல்வி குழுமத்தின் 5ம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாட்டம்
செந்தில் கல்வி குழுமத்தின் 5ம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாட்டம்
செந்தில் கல்வி குழுமத்தின் 5ம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாட்டம்
ADDED : ஆக 18, 2025 03:09 AM
தர்மபுரி: தர்மபுரி, செந்தில் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும், சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி, தர்மபுரி, அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ண-கிரி செந்தில் பப்ளிக் பள்ளி மற்றும் செந்தில் மெட்ரிக் பள்ளி ஆகிய, 5 பள்ளிகளும் ஒருங்கிணைந்து தருமபுரி, அதியமான்-கோட்டையில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளிக-ளுக்கு இடையேயான, 5ம் ஆண்டு விளையாட்டு விழாவை கொண்டாடின.
செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி தலைமை தாங்கினர். செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர் முன்னிலை வகித்தனர்.தர்மபுரி குழந்தை பாதுகாப்பு அலுவலர் செல்வம் கொடியேற்றி, விழாவை தொடங்கி வைத்து, விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு நடந்-தது. ஓட்டப்பந்தயம், உயரம், நீளம் தாண்டுதல், வட்டு, குண்டு மற்றும் ஈட்டி எறிதல் என பல்வேறு தடகள விளையாட்டு போட்-டிகள் நடந்தன. சிறப்பாக அணிவகுப்பு நிகழ்த்திய மாணவர்க-ளுக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.
விழாவில், நிர்வாக அலுவலர் கார்த்தி
கேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர்கள் செந்தில் முருகன், மனோகரன், சிவராம கிருஷ்ணன், வெங்கட அழகிரி, வேதகுமார், துணை முதல்வர்கள், கல்வி ஒருங்கிணைப்பா-ளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்-றனர்.