/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முதல்வர் அறிவிப்பு மக்கள் வரவேற்பு
/
முதல்வர் அறிவிப்பு மக்கள் வரவேற்பு
ADDED : ஆக 18, 2025 03:10 AM
அரூர்: தர்மபுரியில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில், 70,427 பயனாளிகளுக்கு, 830.06 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், 'பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா-விற்கு உட்பட்ட சித்தேரி மலை, சின்னாங்குப்பம், கொளகம்-பட்டி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய, 4 பஞ்.,கள் அரூர் தாலுகாவுடன் இணைக்கப்படும்' என்றார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு
தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அரூர் தெற்கு ஒன்றிய, தி.மு.க., பொறுப்பாளர் தென்னரசு கூறுகையில், ''சின்னாங்குப்பம், கொளகம்பட்டி உள்-ளிட்ட பஞ்.,களை அரூர் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்-தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்,'' என்றார்.