/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிவன் கோவில்களில் சனி மகாபிரதோஷம்
/
சிவன் கோவில்களில் சனி மகாபிரதோஷம்
ADDED : அக் 05, 2025 01:21 AM
தர்மபுரி, தர்மபுரி டவுன் நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, நேற்று வளர்பிறை சனி மகா பிரதோஷத்தையொட்டி பால், இளநீர், சந்தனம், தேன், குங்குமம், மஞ்சள் உள்ளிட்டவற்றால், அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
* அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதேபோல், அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில்
களிலும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில், நந்தி பெருமானுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.
* பொம்மிடி அடுத்த கதிரி
புரம் ஆதி லிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம்
நடந்தது.