/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோமல் தியேட்டரின் சிறுகதை நாடகங்கள்
/
கோமல் தியேட்டரின் சிறுகதை நாடகங்கள்
ADDED : ஆக 10, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு புத்தகத்திருவிழாவின் சிந்தனையரங்க நிகழ்வுக்கு, அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குனர் சின்னசாமி தலைமை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.
நாடக படைப்புகளில் சிறந்து விளங்கிய பெரியசாமி துாரன், புலவர் குழந்தை, ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோரின் படங்களை திறந்து வைத்து, சிறந்த படைப்பாளர்கள் சுப்ரபாரதி மணியன், வா.மு.கோமு, உமையவன் ஆகியோருக்கு கேடயம் பரிசாக வழங்கி கலெக்டர் கந்தசாமி பேசினார். பின், கோமல் தியேட்டர் சார்பில் சிறுகதைகளின் மேடை நாடகம் நடந்தது. பிரபல எழுத்தாளர்களின் சிறு கதைகளை நாடகமாக நிகழ்த்தினர்.