/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மண் கடத்தல்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
/
மண் கடத்தல்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
ADDED : அக் 14, 2024 06:28 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், கடத்துார் வருவாய் உள் வட்-டத்தில் உள்ள கடத்துார், நல்லகுட்லஹள்ளியில், அரசு புறம்-போக்கு மற்றும் சொந்த விவசாய நிலங்களில் வருவாய் துறையி-னரின் உதவியோடு தினமும் கனிம வளங்கள் வெட்டி கடத்தப்ப-டுகிறது. விவசாய நிலங்கள் சமன் செய்வதாக கூறி, கடத்துார், முத்தனுார், அஸ்திகிரியூர், கோம்பை, ஓபிளிநாய்க்கனஹள்ளி பகுதியில், தினமும் டிராக்டர் பொக்லின் மூலம் மண் வெட்டி, செங்கல் சூளைகளுக்கு விற்கப்படுகிறது.
இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அனும-தியின்றி செயல்படுகிறது. மண்வெட்டி கடத்தப்படுவது வருவாய் துறையினருக்கு தெரிந்தும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்-கையும் எடுப்பதில்லை என, அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மண், உளி கற்கள், அரசின் அனுமதியின்றி தாரா-ளமாக விற்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வரை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.