/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி
/
தர்மபுரியில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி
தர்மபுரியில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி
தர்மபுரியில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி
ADDED : டிச 27, 2025 05:49 AM

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாநில அளவிலான கைப்பந்து போட்டியை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் தர்ம-புரி பாய்ஸ் இணைந்து நடத்தும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மின்னொளி கைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில், தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகத்தின் சேர்மன் பூக்கடை ரவி, தலைவர் வெங்கடேஷ்வரன், செயலாளர் தங்-கராஜ் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். அணி வீராங்கனைகளை அறிமுகத்தை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார், தர்மபுரி எஸ்.பி., மகேஷ்வரன் ஆகியோர் போட்-டியை தொடங்கி வைத்தனர்.
சென்னை, மதுரை, ஈரோடு, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 4 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் அணிகளை சேர்ந்த, 96 வீரர்கள், வீராங்க-னைகள் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் மின்னொளி போட்டியாக நடக்கிறது. இதில், வெற்றி பெறும் அணிக்கு நாளை பரிசு வழங்கப்-பட உள்ளது.

