sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய மாணவன் மீட்பு

/

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய மாணவன் மீட்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய மாணவன் மீட்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய மாணவன் மீட்பு


ADDED : அக் 24, 2025 12:49 AM

Google News

ADDED : அக் 24, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த டி.அம்மாபேட்டையை சேர்ந்த விவசாயி ரவிக்குமார் மகன் ரித்திக், 15; அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன். நேற்று பகல், 12:00 மணிக்கு விவசாய தோட்டத்துக்கு சென்ற ரித்திக், தென்பெண்ணையாற்றில் குளிக்க இறங்கினார். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றில் இறங்கிய ரித்திக் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக ஆற்றின் நடுவே உள்ள பாறையில் சிக்கி, 'காப்பாற்றுங்கள்' என

கூச்சலிட்டார்.

அப்பகுதியை சேர்ந்த சிலர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் தோல்வியில் முடிந்தது. அரூர் தீயணைப்புத்துறை வீரர்கள், கயிறு மற்றும் மிதவைகள் மூலம், 6 மணி நேரம் போராடி, மாலை, 6:00 மணிக்கு ரித்திக்கை மீட்டனர்.

உபகரணம் இல்லை

வெள்ளத்தில் சிக்கிய மாணவன் ரித்திக்கை மீட்க, போதிய உபகரணங்கள் இல்லாமல் தீயணைப்புத்துறையினர் தடுமாறினர். வரும் காலங்களில் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்கும் வகையில் நவீன உபகரணங்களை தீயணைப்பு துறையினருக்கு வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us