sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பென்னாகரம் வனப்பகுதியில் கணக்கெடுப்பு: நீர் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

/

பென்னாகரம் வனப்பகுதியில் கணக்கெடுப்பு: நீர் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பென்னாகரம் வனப்பகுதியில் கணக்கெடுப்பு: நீர் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பென்னாகரம் வனப்பகுதியில் கணக்கெடுப்பு: நீர் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


ADDED : ஜன 29, 2024 11:10 AM

Google News

ADDED : ஜன 29, 2024 11:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாக உள்ளது. இதில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளும் ஏராளமான பறவைகளும் உள்ளன. காப்புக்காடுகளிலும், அதற்கு வெளியிலும் அதிக எண்ணிக்கையிலான ஈர நிலங்கள், நீர்நிலைகளில் பல வகை பறவை இனங்கள் தங்கியும், அவ்வப்போது வந்து செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன. அவற்றின் எண்ணிக்கை, எப்பகுதியில் எவ்வகையான பறவை இனங்கள் வாழ்கின்றன என்பது போன்ற தகவல்களை கணக்கெடுத்து, அரிய வகை இனங்களை அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பென்னாகரம் வனப் பகுதியில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு ஜன., 27, 28 தேதிகளில் மாவட்ட வன அலுவலர் அப்பல்லா நாயுடு உத்தரவின் படி, பென்னாகரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில், பென்னாகரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோடியூர் ஏரி, எட்டியாம்பட்டி ஏரி, மூங்கில் மடுவு மற்றும் ஒகேனக்கல் ஆற்று படுகை ஆகிய பகுதிகளில், நடத்தப்பட்டது. இதில், புதிதாக வந்துள்ள பறவைகள் மற்றும் உள்ளூர் பறவைகளின் எண்ணிக்கை கண்டறியப்பட்டதில், நீர்பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்தது.

இதில், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண் ஆசிரியர் கிருஷ்ணன், வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்கள் மற்றும் வனவர்கள் சக்திவேல், கணேஷ், புகழேந்திரன், வனக்காப்பாளர்கள், செல்வகுமார், பழனிசாமி மற்றும் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us