ADDED : மார் 14, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இலக்கிய மன்றத்தின் சார்பில், தமிழ் கூடல் விழா நேற்று நடந்தது.
தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை வரவேற்றார். விழாவில், தமிழின் சிறப்புகள், தமிழ் இலக்கணம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், உதவி தலைமையாசிரியர் கலைவாணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

