/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிவ சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்
/
சிவ சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED : பிப் 16, 2025 03:31 AM
தர்மபுரி: குமாரசாமிபேட்டை, சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
தர்மபுரி டவுன் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 6- அன்று கொடியேற்-றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வழிபாடு மற்றும் பல்வேறு வாக-னங்களில் சுவாமி திருவீதி உலா, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, விநாயகர் தேரோட்டம், சிவசுப்பிரமணிய சுவாமி தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பல்லக்கு உற்சவம், கோவில் தெப்பக்கு-ளத்தில் தெப்ப உற்சவமும் நடந்தது. இதையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில், 7 முறை வலம் வந்து பக்தர்
களுக்கு அருள்பாலித்தார். அப்போது, சுவாமிக்கு சிறப்பு வழி-பாடு மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சயன உற்சவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழா ஏற்பா-டுகளை, கோவில் அறங்கா
வலர்கள் மற்றும் விழா குழுவினர்
செய்திருந்தனர்.