sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காவிரியாற்றில் அடித்து வரப்பட்ட உயிரிழந்த யானையின் உடல்

/

காவிரியாற்றில் அடித்து வரப்பட்ட உயிரிழந்த யானையின் உடல்

காவிரியாற்றில் அடித்து வரப்பட்ட உயிரிழந்த யானையின் உடல்

காவிரியாற்றில் அடித்து வரப்பட்ட உயிரிழந்த யானையின் உடல்


ADDED : ஆக 12, 2024 06:38 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில், அடித்து வரப்பட்ட யானையின் உடல் கிடக்கிறது.கர்நாடக மாநில காவிரி கரையோரத்தில் கடந்த, 4 நாட்களுக்கு முன், பெண் யானை ஒன்று உயிரிழந்தது.

அதை, கர்நாடகா மாநில வனத்துறையினர், பிரேத பரிசோதனை செய்து, அடக்கம் செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர். கடந்த, 2 நாட்களுக்கு முன், கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரில், அந்த யானை அடித்து வரப்பட்டது. தற்போது ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடியில், ஆற்றின் நடுவே அதன் உடல் கிடக்கிறது. யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்துள்ளதால், அதன் உடல் பாகங்கள் ஆற்றுநீரில் கலந்து, மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன் பெறும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு உடல்நிலை பாதிக்கும் அபாயமும், தொற்று பரவும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆற்று நீர், கலங்கலாக வந்ததால் மக்களில் பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தற்போது, உயிரிழந்த யானையின் உடல் ஆற்றில் அடித்து வரப்பட்டதால், ஒகேனக்கல் கூட்டு குடிநீரை நம்பியுள்ள மக்கள், மீண்டும் உடல் உபாதைகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. எனவே, அந்த யானையை அப்புறப்படுத்தி, வனப்பகுதியில் அடக்கம் செய்யும் படி, தமிழக வனத்துறையினர், கர்நாடக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us