/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஜாமின் பெற்று தலைமறைவாக இருந்தவர் மீண்டும் கைது
/
ஜாமின் பெற்று தலைமறைவாக இருந்தவர் மீண்டும் கைது
ADDED : செப் 24, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் இரும்பாலையை சேர்ந்தவர் விக்னேஷ், 20. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இவர், ஜாமினில் வெளியே வந்தார். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், விக்னேஷ் ஆஜராகாமல் இரண்டு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனால் விக்னேைஷ பிடிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்-பித்தது. இதனையடுத்து நேற்று காலை இரும்பாலை போலீசார், அதே பகுதியில் பதுங்கி இருந்த விக்னேஷை கைது செய்து, நீதி-மன்றத்தில்
ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.