sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்ட் வரும் 27ல் குத்தகை ஏலம்

/

தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்ட் வரும் 27ல் குத்தகை ஏலம்

தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்ட் வரும் 27ல் குத்தகை ஏலம்

தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்ட் வரும் 27ல் குத்தகை ஏலம்


ADDED : நவ 25, 2025 01:53 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீது, தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், 2,500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.

மலைக்கோவில் அடிவாரத்திலுள்ள, 2 மற்றும், 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான குத்தகை ஏலம் வரும், 27ல், காலை, 11:00 மணிக்கு, பொய்யப்பட்டியில் உள்ள தீர்த்தமலை பஞ்., அலுவலகத்தில் நடக்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சைக்கிள் ஸ்டாண்டில் கூரை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: ஆண்டு தோறும் சைக்கிள் ஸ்டாண்ட் டெண்டர் விடப்படுகிறது. 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வந்த போதிலும், சைக்கிள் ஸ்டாண்டில் கூரை வசதி இல்லாததால், மழையில் வாகனங்கள் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகிறது. அதே போல், வாகனங்கள் திருட்டை தடுக்க, 'சிசிடிவி' கேமரா வசதி இல்லை. தரைத்தளம் முறையாக அமைக்கப்படாததுடன், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் இல்லை. எனவே, சைக்கிள் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us