/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகை ஏலம் ஒத்திவைப்பு
/
தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகை ஏலம் ஒத்திவைப்பு
தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகை ஏலம் ஒத்திவைப்பு
தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகை ஏலம் ஒத்திவைப்பு
ADDED : பிப் 06, 2025 05:49 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீது, தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், 2,500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். மலைக்கோவில் அடிவாரத்திலுள்ள, 2 மற்றும், 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான குத்தகை ஏலம் கடந்தாண்டு, நவ., 4ல் பொய்யப்பட்டியிலுள்ள தீர்த்தமலை பஞ்., அலுவலகத்தில் நடந்தது. இதில், தீத்தான் என்பவர், 19.30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
தொடர்ந்து, சைக்கிள் ஸ்டாண்ட் மறு ஏலம் கோரி, ஏலம் போன தொகையை விட கூடுதலாக, 10 சதவீதம் சேர்த்து, 21.23 லட்சம் ரூபாய்க்கு சிவக்குமார் என்பவர் காசோலை வழங்கினார். இதையடுத்து, நேற்று அரூர் பி.டி.ஓ., அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஏலத்தில் பங்கேற்க வந்த, 6 பேர் காலை, 10:45 மணிக்கு துணை பி.டி.ஓ., சக்திவேலிடம் டிபாசிட் தொகைக்கான காசோலைகளை வழங்கினர். பகல், 12:00 மணிக்கு நிர்வாக காரணங்களுக்காக, ஏலம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக, அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் ஏலத்தில் பங்கேற்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், 'காசோலை வழங்கிய எங்களுக்கு ஏலத்தில் பங்கேற்க டோக்கன் வழங்கப்பட்டது. பின், திடீரென ஏலம் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர் இதுவரை பணம் செலுத்தவில்லை.
ஆனால், 3 மாதங்களாக, 10 பேர் கொண்ட கும்பல், சைக்கிள் ஸ்டாண்டில் பணம் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் விட, மாவட்ட நிர்வாகம்
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.