/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொடர் மழையால் தக்காளி செடிகள் சேதம்
/
தொடர் மழையால் தக்காளி செடிகள் சேதம்
ADDED : டிச 28, 2024 02:42 AM
அரூர்: அரூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், தக்காளி செடிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், நரிப்பள்ளி, கம்பை-நல்லுார் உள்ளிட்ட, சுற்றுவட்டாரப் பகுதிகளில், 2,500க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளியை, விவசாயிகள் நடவு செய்துள்-ளனர். தற்போது, பெய்து வரும் தொடர் மழையால், தக்காளி செடிகள் அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்-ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், அரூர் சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள் தக்காளியை ஆர்வத்துடன் நடவு செய்தனர். தற்போது, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் தோட்டத்தில் தண்ணீர் தேங்கி-யுள்ளது. இதனால், தக்காளி செடிகள் முற்றிலுமாக பாதிக்கப்-பட்டுள்ளது. குறிப்பாக பூக்கள் மற்றும் காய்கள் மழையால் உதிர்ந்து செடிகளில் உள்ள இலைகளும் அழுகி உள்ளன.
மேலும், பழங்களும் வீணாகி விட்டன. இதனால் தக்காளி சாகு-படி பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் செடிகள் அழுகி வரு-வதால் விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்-ளதால் கவலை அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.