/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூன் 16, 2025 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு, விடுமுறை தினமான நேற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர். ஒகேனக்கல் காவிரியாற்றில், 6,500 கன அடி நீர்வரத்தானது. மெயின் பால்ஸ் மற்றும் சினி பால்ஸில் குளித்து மகிழ்ந்தனர்.
பிரசித்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டனர். மெயின் அருவி, பெரியபாணி, ஐந்தருவி பகுதியில் பாறைகளுக்கு இடையே குடும்பத்தோடு, காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.