ADDED : ஜூன் 04, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாசில்தார் ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள், மருதாண்டப்-பள்ளி பகுதியில் நேற்று மாலை, 4:00 மணிக்கு வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழி-யாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்த-போது, உரிய அனுமதி சீட்டு
இல்லாமல், ஒரு யூனிட் கற்களை கொண்டு செல்வது தெரிந்தது.
அதனால், டிராக்டரை பறிமுதல் செய்த தாசில்தார் ரமேஷ்பாபு, சூளகிரி போலீசில் ஒப்ப-டைத்தார். அவரது புகார் படி, போலீசார் வழக்குப்-பதிந்து டிராக்டர் டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.
