sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கோவில் முன் மரம் வெட்டிய விவகாரம்: போலீஸ் பாதுகாப்பு

/

கோவில் முன் மரம் வெட்டிய விவகாரம்: போலீஸ் பாதுகாப்பு

கோவில் முன் மரம் வெட்டிய விவகாரம்: போலீஸ் பாதுகாப்பு

கோவில் முன் மரம் வெட்டிய விவகாரம்: போலீஸ் பாதுகாப்பு


ADDED : டிச 30, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி டவுன், சேலம் - தர்மபுரி நெடுஞ்சாலை பாரதிபுரத்தில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. கோவில் முன்பிருந்த அரச மரம் நேற்று முன்தினம் அதிகாலை, 2:30 மணிக்கு, மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டது. இது குறித்து, உரிய நடவடிக்கை கோரி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மதன்குமார் அளித்த புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

நேற்று முன்தினம் காலை கோவில் முன் கூடிய பக்தர்கள், மரத்தை வெட்டியதற்கு கோவில் அருகிலுள்ள பல் மருத்துவமனை உரிமையாளர் தான் முக்கிய காரணம் என குற்றம் சாட்டினர். மேலும், நடவடிக்கை கோரி பக்தர்கள் சார்பில், தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு, தர்மபுரி டவுன் போலீசார், கோவில் மற்றும் அருகிலுள்ள பல் மருத்துவமனை பகுதியில், தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us