ADDED : ஜன 29, 2025 07:11 AM
அ நிறம் | அளவு
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த பேளாரஹள்ளி அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில், மரக்கன்றுகள் நடும் விழா, தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது.
இதில், மா, பலா, வாழை உள்ளிட்ட, 65க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணியில் மாணவ, மாணவியர் ஈடுபட்டனர். தொடர்ந்து, மரம் நடுவதன் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
