sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சுடுகாடு கேட்டு போராட முயற்சி

/

சுடுகாடு கேட்டு போராட முயற்சி

சுடுகாடு கேட்டு போராட முயற்சி

சுடுகாடு கேட்டு போராட முயற்சி


ADDED : அக் 06, 2024 03:35 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், வெங்கடசுமுத்திரம் ஊராட்சி, கோழி மேக்கனுாரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இதில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த, 168 குடும்பத்தினர் கடந்த, 2 ஆண்டுக்கு மேலாக வசிக்கின்றனர். நேற்று இங்குள்ள செந்தில் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சுடுகாடு வசதி-யின்றி, அவரை அடக்கம் செய்ய முடியாமல் திணறிய குடியிருப்-புவாசி சங்க நிர்வாகிகள் தென்னரசு, ராஜாமணி, தொல்காப்பியன் உள்ளிட்டோர் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளியிடம் சுடு-காடு வசதி கேட்டு முறையிட்டனர். அவரின் பதிலால் திருப்திய-டையாமல், சுடுகாட்டு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றால், சட-லத்துடன் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.அவர்களிடம் பாப்பிரெட்டிப்பட்டி ஆர்.ஐ., கார்த்திக், வெங்கட சமுத்திரம் வி.ஏ.ஓ., சுரேஷ் ஆகியோர், முறைப்படி மனு கொடுத்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். தற்போது மட்டும் பாப்பிரெட்டிப்பட்டி சுடுகாட்டில் அடக்கம் செய்ய கூறியதையடுத்து, இறந்த செந்திலின் உடலை, பாப்பி-ரெட்டிப்பட்டி சுடுகாட்டில் மக்கள் அடக்கம் செய்தனர்.






      Dinamalar
      Follow us