ADDED : அக் 23, 2024 01:30 AM
அ நிறம் | அளவு
கட்டுமான பொருட்களை
திருடிய இருவர் கைது
காரிமங்கலம், அக். 23-
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, மோதுாரை சேர்ந்த கூலி தொழிலாளி மாரி, 45. இதில், மாரி மற்றும் அவரது மகன் இருவரும் வீடு கட்டுவதற்காக, பெங்களூருலிருந்து கேட், ஏணி, ஜன்னல், கைப்பிடி என இரும்பு பொருட்களை வாங்கி வைத்திருந்தனர்.
இதனை அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ், 27, நாராயணன், 40, ஆகிய
இருவரும் சேர்ந்து திருடியது தெரியவந்தது. இது குறித்து மாரி அளித்த படி, காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து,
இருவரையும் கைது செய்தனர்.
