sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒரே யானை தாக்கியதில் 2 நாளில் இருவர் பலி

/

ஒரே யானை தாக்கியதில் 2 நாளில் இருவர் பலி

ஒரே யானை தாக்கியதில் 2 நாளில் இருவர் பலி

ஒரே யானை தாக்கியதில் 2 நாளில் இருவர் பலி


ADDED : செப் 25, 2024 01:25 AM

Google News

ADDED : செப் 25, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு:பாலக்கோடு அருகே ஒற்றை யானை தாக்கியதில் இரு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த முத்துகவுண்டர் தெருவை சேர்ந்த விவசாயி பழனி, 65. இவர் எர்ரணஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாமியார் நகரில், அவரின், 3 ஏக்கர் விவசாய நிலத்தில் தக்காளி, நிலக்கடலை பயிரிட்டிருந்தார்.

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை விரட்ட, நேற்று முன்தினம் நள்ளிரவு, அவருடைய நிலத்தில் காவலில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஆண் யானை ஒன்று தாக்கியதில் பழனி இறந்தார்.

இதேபோல, நேற்று அதிகாலை, பாலக்கோடு அடுத்த செங்கோடப்பட்டியை சேர்ந்த துரைசாமி, 68, என்பவரையும் இதே யானை தாக்கியதில் அவரும் இறந்தார். அடுத்தடுத்து இரு தினங்களில், யானை தாக்கியதில் இரு விவசாயிகள் இறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us