/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இரு தரப்பினர் மோதல் 5 பேருக்கு 'காப்பு'
/
இரு தரப்பினர் மோதல் 5 பேருக்கு 'காப்பு'
ADDED : அக் 02, 2024 01:53 AM
இரு தரப்பினர் மோதல்
5 பேருக்கு 'காப்பு'
கிருஷ்ணகிரி, அக். 2-
ஊத்தங்கரை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன், 26. இன்டர்நெட் கேபிள் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த, 29 இரவு ஊத்தங்கரை ஜண்டமேடு பகுதியிலுள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வீராட்சிகுப்பம் சக்திவேல், 24, மோகன், 21 ஆகியோர் மது போதையில் வந்தனர். அவர்கள் பார்த்திபனுடன் போதையில் தகராறு செய்து, அவரை கிளாஸ் டம்ளரால் தாக்கினர். இதில் காயமடைந்த பார்த்திபன் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார் படி ஊத்தங்கரை போலீசார் சக்திவேல், 24, மோகன், 21 ஆகியோரை கைது செய்தனர். அதேபோல சக்திவேல், தான் தாக்கப்பட்டதாக அளித்த புகார் படி பார்த்திபன், 26, உலகநாதன், 35, சங்கர், 26 ஆகிய 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

