/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பஸ்களில் ஸ்டிக்கர் நா.த., கட்சியினர் கைது
/
அரசு பஸ்களில் ஸ்டிக்கர் நா.த., கட்சியினர் கைது
ADDED : ஜன 01, 2026 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயக்கோட்டை: தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் இருக்க வேண்டும் எனக்கூறி, நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ்களில் எழுதப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழகம் என்ற எழுத்தில், தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை, நாம் தமிழர் கட்சியினர் நேற்று ஒட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், 22 பேரை ராயக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

