sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அனுமதியற்ற கல் குவாரிகளை மூட வலியுறுத்தி வி.எச்.பி., மனு

/

அனுமதியற்ற கல் குவாரிகளை மூட வலியுறுத்தி வி.எச்.பி., மனு

அனுமதியற்ற கல் குவாரிகளை மூட வலியுறுத்தி வி.எச்.பி., மனு

அனுமதியற்ற கல் குவாரிகளை மூட வலியுறுத்தி வி.எச்.பி., மனு


ADDED : டிச 23, 2025 06:01 AM

Google News

ADDED : டிச 23, 2025 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், அனுமதியில்லாமல் இயங்கி வரும் கல் குவாரிகளை மூட வேண்டுமென, விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் அந்த அமைப்பினர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து, அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து கிரானைட் மற்றும் ஜல்லி கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவை எடுக்கப்படுகிறது. இதனால், தமிழக அரசு மாவட்டத்தின் வருவாய்க்காக புதிய கல் குவாரிகளை தொடங்க ஆர்வம் காட்டி வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்து வருகிறது. மேலும், மலைகளில் இருந்து, வெட்டி எடுக்கப்படும் பாறைகள், தன்னை சமன்படுத்தி கொள்ள நகரும் அபாயம் உள்ளது. இதனால், மாவட்டம் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, மாவட்டத்தில் அனுமதியில்லாமல் இயங்கி வரும் கல் குவாரி களை உடனடியாக மூட வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.






      Dinamalar
      Follow us