sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மீனாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் தண்ணீரை கடந்து செல்ல முடியாமல் முடங்கிய கிராமத்தினர்

/

மீனாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் தண்ணீரை கடந்து செல்ல முடியாமல் முடங்கிய கிராமத்தினர்

மீனாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் தண்ணீரை கடந்து செல்ல முடியாமல் முடங்கிய கிராமத்தினர்

மீனாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் தண்ணீரை கடந்து செல்ல முடியாமல் முடங்கிய கிராமத்தினர்


ADDED : ஜன 02, 2025 01:10 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன. 2---

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த போதக்காட்டில் மீனாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், ஆபத்தான நிலையில், ஆற்று தண்ணீரை கடந்து செல்ல

முடியாமல் கிராம மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், போதக்காடு ஊராட்சியில், கரியதாதனுார், மாரியம்மன் கோவிலுார், போதக்காடு முல்லை நகர் ஆகிய, நான்கு குக்கிராமங்கள் உள்ளன.

இவையனைத்தும் ஏற்காடு மலையின் பின் பகுதியில் அமைந்துள்ளன. 3,000 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் மாரியம்மன் கோவிலுார் பகுதியில் மட்டும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

ஏற்காடு மலையில் உற்பத்தியாகும் மீனாறு, இக்கிராமத்தின் வழியாக

செல்கிறது. இந்த ஆறு கிராமத்தை இரண்டாக பிரிக்கிறது. இதில் ஆற்றின் மறுகரையில் ஏற்காடு மலையடிவாரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இம் மக்கள் விவசாயத்தையும் அதை சார்ந்த தொழில்களில் ஈடுபடுகின்றனர். ஏற்காடு பின்புறம் மலையடிவாரத்தில் பசுமையான தோட்டங்கள், குடிநீர் வசதி என இயற்கையோடு ஒன்றி வாழும் மக்களுக்கு, மழைக்காலம் என்றால் கஷ்டமான நிலைதான் உள்ளது.

இம் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மீனாற்றை கடந்துதான், போதக்கடு, பையர்நத்தம் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டிக்கு செல்ல வேண்டும். பஸ் வசதி கிடையாது. இரு சக்கர வானங்களை மட்டுமே நம்பி உள்ளனர். மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்லும் போதும், வறண்ட நிலையிலும், மக்கள் எளிதாக ஆற்றைக் கடந்து செல்கின்றனர். மீனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, ஆற்றை கடக்க முடிவதில்லை இதனால் பள்ளி, கல்லுாரி, செல்லும் மாணவ, மாணவியர், விவசாயிகள் என அனைவரும் வீட்டோடு முடங்கி கிடக்கின்றனர். இப்பகுதியினர் கடந்த பல ஆண்டுகளாக மீனாற்றின் குறுக்கே பாலம் கட்ட வலியுறுத்தி அரசியல் வாதிகள், அதிகாரிகளிடத்தில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடந்த மாதம் 'பெஞ்சல்' புயலால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அப் பகுதி மக்கள், மாணவர்கள், 10 நாட்களுக்கு மேலாக ஆற்றை தாண்டி வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.

தொடர்ந்து தற்போதும் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் கயிறு கட்டி ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். மீனாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற மலைவாழ் பழங்குடி மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us