/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
/
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : ஜூன் 07, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டியில், விநாயகர் மற்றும் ஓம்சக்தி அம்மன் கோவில், கும்பாபிஷேக விழா, கடந்த, 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று, பம்பை வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன், பெண்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக வந்தனர். இன்று, கணபதி, லட்சுமி, சரஸ்வதி மற்றும் யாகசாலை பூஜை நடக்கவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.