/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வியாபாரிகள் வராததால் தர்பூசணி தேக்கம்
/
வியாபாரிகள் வராததால் தர்பூசணி தேக்கம்
ADDED : மே 20, 2024 02:04 AM
அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், வியாபாரிகள் வராததால், வயலில் தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால், தர்பூசணி பழங்கள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, அவர் கள் கூறியதாவது:
தர்பூசணியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கிரேன் எனப்படும் ரகம்; எந்த பருவத்திலும் விளையக்கூடியது. 60 நாட்களில் மகசூல் தரக்கூடியது. ஏக்கருக்கு, 50,000 ரூபாய் வரை செலவாகி உள்ளது. இந்தாண்டு, கிரேன் தர்பூசணி நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. கடந்த, 10 நாட்களுக்கு முன், ஒரு டன் தர்பூசணி, 25,000 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், 3 நாட்களுக்கு முன், ஒரு டன், 12,000 ரூபாயாக குறைந்தது. இப்போது, அந்த விலை கொடுத்தும், வாங்குவதற்கும் வியாபாரிகள் யாரும் வராததால், தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யப்படாமல் வயலில் தேக்கமடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

