ADDED : செப் 17, 2026 06:47 AM

தர்மபுரி; தர்மபுரி, நல்லம்பள்ளி பென்னாகரம், பாப்பிரெட்-டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மிதமான மழை பெய்தது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்-டத்தில் மாரண்டஹள்ளி, 38 மி.மீ., மழையளவு பதிவானது. அதேபோல் ஒகேனக்கல், 37, பாப்பி-ரெட்டிப்பட்டி, 35, பென்னாகரம், 28, தர்மபுரி, 17, பாலக்கோடு, 5, நல்லம்பள்ளி, 3.7 மி.மீ., என, மாவட்டத்தில் மொத்தம், 163.7 மி.மீ., சராசரியாக, 18.19 மி.மீ., மழை பதிவானது.
குளிர்ச்சியானசீதோஷ்ணம்
அரூர் மற்றும் மோப்பிரிப்பட்டி, நாச்சினாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, 4:45 மணி முதல், மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருக்-கெடுத்து ஓடியது. அரூரில், நான்கு ரோடு, திரு.வி.க., நகர், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்-டிகள் அவதிக்கு உள்ளாகினர். வறட்சியால் மர-வள்ளி
கிழங்கு, மஞ்சள், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து வந்த நிலையில், நேற்று பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை
நிலவியது.
