ADDED : அக் 14, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் அடுத்த சிக்கலுாரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சென்னம்மாள், 46. தம்பதியர் நேற்று மாலை, 5:30 மணிக்கு அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த
போது, இடி, மின்னலுடன் மழை பெய்ததால், அருகில் இருந்த மாட்டு கொட்டகைக்கு சென்று நின்றிருந்தனர். அப்போது, மின்னல் தாக்கியதில் சென்னம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். கோட்டப்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.