ADDED : ஜன 21, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த, எர்ரனஹள்ளி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த விவசாயி ஆனந்தன், 40. இவர், 2 ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வந்தார். கடந்த, 18 அன்று இரவு வீட்டிற்கு முன், ஆடு மற்றும் மாடுகளை கட்டி விட்டு சென்றார். அதிகாலை, 5:00 மணிக்கு வெளியில் வந்து பார்த்தபோது, பஜாஜ் சிடி 100 பைக்கில் வந்த நபர், 2 ஆடுகளை திருடி செல்ல முயன்றார். அப்-போது, அக்கம் பக்கத்தினர் ஆடு திருடிய நபரை பிடித்து, பாலக்-கோடு
போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் பாலக்கோடு அடுத்த, பனந்தோப்பை சேர்ந்த சத்தியமூர்த்தி, 28, என தெரியவந்தது.