ADDED : செப் 12, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி அடுத்த புழுதிகரையை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் மவுலிராசு, 20. பி.காம்., படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 1:30 மணிக்கு, தன் மொபைல்போனை சார்ஜ் போட்டபடி, பிரித்து பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது, மின்சாரம் தாக்கியதில், அவரது உடலில் வலதுபக்க மார்பு, முழங்கை உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டு பலியானார். கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.